கராச்சி:
பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டு வெடித்ததால் 30 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 50 பேர் படுகாயமடைந்தனர்.
pakistan
பாகிஸ்தான் பார் அசோசியேசன் தலைவர் பிலாம் அன்வர் காசி இன்று காலை பலுசிஸ்தான் தலைநகர் குவாட்டாவில் மர்ம நபர்களால் சுட்டுகொல்லப்பட்டார்.
குவெட்டா மன்னோ சாலையில் அருகில் உள்ள  மங்கள் சவுக் பகுதிக்கு காரில்  சென்றபோது, மர்ம நபர்கள் அவரை  துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
pakistann-2
உடனடியாக குவெட்டா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிறிது நேரத்தில் மரணமடைந்தார்.
பார் அசோசியேசன் தலைவர் சுட்டுகொல்லப்பட்டதை அறிந்ததும், ஏராளமான வழக்கறிஞர்களும், பத்திரிகையாளர்களும் மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் திரண்டனர். அப்போது, திடீரென  சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.  இதில்,  வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட 25 பேர் பலியானதாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் டிவி சேனல்  தெரிவித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
pakistan-1
கடைசி நேர தகவல் படி குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிகை 30ஆக உயர்ந்து உள்ளது என்றும், மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் மருத்துவமனை வளாகமே போர்க்களம் போல காட்சி அளித்தது.  அங்கு பதட்டம் நிலவுகிறது. பொதுமக்கள் பீதியில் அங்குமிங்கும் சிதறி ஓடினர். இதையடுத்து அப்பகுதி முழுவதும காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.