ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்துள்ளார்.

போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி பாகிஸ்தான் ராணுவம் ஜம்மு-காஷ்மீா் எல்லைப்பகுதிகளில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய நிலைகள் மீதும், குடியிருப்புகள் மீதும் தொடா்ந்து அத்துமீறி தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

இந் நிலையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தின் நவ்ஷெரா பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. அதில் இந்திய ராணுவ வீரர் வீர மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் நேற்று சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டமிட்டது தெரியவந்துள்ளது. இது குறித்து, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நோட்டீசும் அனுப்பி உள்ளது.