லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்ட முடிவில், பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

முன்னதாக, தனது முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 583 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

விராத் கோலியின் பாணியில் நாள் முடியும் தருவாயில் டிக்ளேர் செய்து, பாகிஸ்தானை களமிறங்கச் செய்தது இங்கிலாந்து. இந்த பாணி நேற்றும் ஒர்க்அவுட் ஆனது. 24 ரன்களை எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான்.

முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 150+ ரன்களை எடுத்ததோடு சரி, துவக்க வீரர் ஷான் மசூத் தொடர்ந்து சொதப்புகிறார். நேற்று 4 ரன்களுக்கு அவுட்டானார். பாபர் ஆஸம் 11 ரன்களுக்கு வெளியேற, அபிட் அலியும் 1 ரன்களுக்கு நடையைக் கட்டினார்.

பாகிஸ்தான் அணியின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர் மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்தான்.