டில்லி,
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா, வணிக விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது.  இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
modi
பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் சில சமூகங்களை சேர்ப்பது அல்லது திருத்தத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இதன் பயனாக  அசாம், பீகார், இமாசல பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் உள்ள சில சமூகங்களை சேர்ப்பது அல்லது அவற்றிற்கான திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்த 36 ஆயிரத்து 384 குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இடம் பெயர்ந்தோருக்கு சிறப்பு திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5.5 லட்சம் வழங்கும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா, வணிக விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தவும்  மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் மும்பை புறநகர் போக்குவரத்து 3வது கட்ட திட்டம் நிறைவேற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.