இஸ்லாமாபாத்:
கொரோனா வைரஸ் தொற்று சீனாவை விட பாகிஸ்தானில் அதிகரித்து வருகிறது. அங்கு சமீபத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான அமைச்சர் சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த நிலையில், மீண்டும் தொற்று பரவி வருகிறது.
உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. பாகிஸ்தானிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.  அங்கு இதுவரை பாதிக்கப்ப்டடோர் எண்ணிக்கை 85,246 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவை முதன்முதலில் பரப்பிய சீனாவில் பாதிப்பு  84,160 ஆக இருந்த நிலையில், பாகிஸ்தானில் அதை மிஞ்சி இருப்பதாக அந்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 4,688 புதிய கொரோனா வைரஸ் தொற்று பதிவு செய்யப்பட்டு, 85,246 ஆக அதிகரித்த உள்ளது. அதுபோல, 24 மணி நேரத்தில் 1,770 நோயாளிகளின் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக சி.எஸ்.எஸ்.இ.யின் தரவுகளின்படி, தற்போதைய நிலையில், 84,160 நோயாளிகளுடன் சீனா 18 வது இடத்தில் உள்ளது, இது பாகிஸ்தானை விட ஒரு படி குறைவாக உள்ளது.

பாகிஸ்தானின்  பஞ்சாப்  மாநிலத்தில் 31,104 பேரும், கைபர்-பக்துன்க்வா 11,373 பேர், பலூசிஸ்தான் 5,224 பேர், இஸ்லாமாபாத் 3,544 பேர், கில்கிட்-பால்டிஸ்தான் 824 பேர்  மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 285 பேர்  வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தரமான இயக்க நடைமுறைகளை தானாக முன்வந்து பின்பற்றுவதற்காக மக்களைப் பயிற்றுவிப்பதற்கும் நாடு முழுவதும் ஒரு பயனுள்ள ஊடக பிரச்சாரம் தொடங்கப்பட்டு வருவதாக திட்டமிடல் அமைச்சர் அசாத் உமர் தெரிவித்தார்.