இஸ்லமாபாத்:

பலாகோட் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிகாலை தாக்குதல் நடத்திய போது, நில அதிர்வு என நினைத்து மிரண்டுபோய் உறக்கத்திலிருந்து எழுந்துள்ளனர்.


பாகிஸ்தானில் பலாகோட் அருகேயுள்ள ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாமை இந்திய விமானப்படை தகர்த்துவிட்டதாகவும், கடந்த 1971-ம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்தியா நடத்திய தாக்குதல் இது என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், இந்த விமானப் படை தாக்குதலில் ஒருவருக்கு மட்டுமே காயம் ஏற்றபட்டதாக கிராமத்தினர் கூறியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, அதிகாலை உறங்கிக் கொண்டிருந்தபோது, பெரும் சத்தம் கேட்டது. நில அதிர்வு என நினைத்து அலறியடித்து எழுந்தோம்.

ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முகாம் மலை உச்சியில் பல ஆண்டுகள் இருப்பது உண்மைதான்.
ஆனால், இந்திய விமானப் படையின் தாக்குதல் ஜெய்ஸ் இ முகமது அமைப்பின் முகாமிற்கு ஒரு கி.மீ தொலைவில் நடத்தப்பட்டிருக்கிறது என்றனர்.