லண்டன்,

பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

லண்டனில் உள்ள  ஆக்ஸ்போர்டு டியூப் சுரங்க ரெயில்வே ஸ்டேஷனில்  திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. மர்ம நபர் யாரோ துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ரெயில் ஏற வந்த பயணிகள் அலடி அடித்துக்கொண்டு ரெயில் நிலையத்தை விட்ட வெளியேறினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு பெண் காயமடைந்தாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து சுரங்க ரெயில் நிலையங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்காரணமாக  லண்டன் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.