டில்லி:

1982ம் ஆண்டு ஐஃஎப்எஸ் அதிகாரியான பங்கஜ் சரண் வெளியுறவு அமைச்சகத்தில் பல பதவிகளை வகித்தவர். கெய்ரோ, அமெரிக்கா தூதரக அதிகாரியாக பணியாற்றியவர். இவர் தற்போது ரஷ்யாவுக்கான இந்திய தூதராக உள்ளார். தற்போது இவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2 ஆண்டுகளுக்கு இந்த புதிய பொறுப்பில் இருப்பார். ரா அமைப்பின் முன்னாள் தலைவர் ராஜிந்திர குமார் கடந்த ஜனவரி மாதம் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். தற்போது பங்கஜ் சரணும் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.