சென்னை,

பிஎஸ்-ன் நேற்றைய இரவு ஜெயலலிதா சமாதி பேட்டியை தொடர்ந்து  அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம் செய்து சசிகலா அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் நிமிர்ந்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து நள்ளிரவு போயஸ்கார்டன் இல்லத்தில் அதிமுக முக்கிய தலைவர்கள் சசிகலாவுடன் ஆலோசனை நடத்தின்ர்.

இதையடுத்து,  அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டுள்ளதாகவும், புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற  மூத்த கட்சித்தலைவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.