போர்ட் மோர்ஸ்பை: பப்புவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பப்புவா நியூ கினியா பூகம்பம் பாதிப்பு ஏற்பட கூடிய பகுதியில் அமைந்துள்ளதால் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

இந் நிலையில், பப்புவா நியூ கினியாவின் கிழக்கு பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது.

நிலநடுக்கமானது, பின்ஸ்காபென் நகரில் இருந்து வடமேற்கே 36 கிமீ  தொலைவில் உணரப்பட்டுள்ளது.  நிலநடுக்கம் 29.3 கிமீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பொருளிழப்புகளோ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதா என்பது பற்றி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.