சென்னை:

ர்.கே நகர் தேர்தலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக துணை ராணுவம் தொகுதிக்கு வந்துள்ளது.

சென்னை ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்து, இறுதி வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வேட்பாளர்கள் தீவி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆர்.கே நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.  ஏற்கனவே பறக்கும் படையை சேர்ந்த சிறப்பு அதிகாரிகளும், தமிழக காவல்துறையினரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து இரண்டு கம்பெனி துணை ராணுவப்படையினர் இன்று அதிகாலை ஆர்.கே நகர் தொகுதிக்கு வந்தடைந்தனர். மொத்தம் 276 வீரர்கள் தற்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் 10 சிறப்பு கம்பெனி துணை ராணுவப்படையினர் ஆர்.கே நகர் வரவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.