சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்தார். அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
அமெரிக்காவை சேர்ந்த ஆவி ஆராய்ச்சி நிபுணர் ஸ்டீவ் ஹஃப், சுஷாந்த் ஆவியுடன் பிரத்யேக கருவி உதவியுடன் தொடர்பு கொண்டு பேசியதாக வீடியோ வெளியிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறப்பதற்கு முன் ஒருவருடன் நீண்ட வாக்குவாதம் மோதல் நடந்தாக சுஷாந்த் ஆவி தெரிவிக்கிறது அந்த நபர் யார் என்பது பற்றி தெரிய வில்லை,

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பல்லாயிரம் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சுஷாந்த் ஆவியுடன் பேசியதாக அமானுஷ்ய நிபுணர் ஸ்டீவ் ஹஃப் கூறினார். தனி அறையில் கருவிகளுடன் அமர்ந்து சுஷாந்த் ஆவியை வரவழைத்து பேசுகிறார் ஸ்டீவ். ஸ்டீவ் கேட்கும் கேள்விகளுக்கு சுஷாந்த் ஆவி சில வற்றுக்கு மட்டும் பதில் அளிக்கிறது.
தனி அறையில் அமர்ந்து சுஷாந்த் ஆவியு டன் பேசும் அந்த வீடியோவையும் ஸ்டீவ் வெளியிட்டுள்ளார். இது ஹஃப்பின் யூடியூப் சேனலில் வெளியாகி உள்ளது.
வீடியோவில் இடம்பெற்றுள்ள உரையாடல் வருமாறு:
“நீங்கள் வெளிச்சத்தில் இருக்கிறீர்களா” “நீங்கள் நேற்றிரவு பார்த்த வெளிச்சத்தில் இருக்கிறீர்கள்” என்று ஸ்டீவ் கூறுகிறார் “நான் அதில் இருந்தேன்.” என பதிலளிக்கிறது சுஷாந்த் ஆவி,
“நான் உங்கள் வேலை பற்றி அறிந்திருக்க வில்லை, ஆனால் உங்கள் ரசிகர்களால் நீங்கள் அதிகம் நேசிக்கப்படுகிறீர்கள், உங்கள் ரசிகர்களிடம் எதையும் சொல்ல விரும்பு கிறீர்களா?”
…….(மவுனம்)
“நீங்கள் எப்படி இறந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா” என்று கேட்டபோது, ​​”அவர்கள் அனைத்தையும் மருத்துவரிடம் விட்டுவிடுவார்கள், நாங்கள் இறந்து விட்டோம்’ என்று பதிலளிக்கிறது ஆவி.
பின்னர் 2வது வீடியோவில் பேசும் ஆவி,’எனக்கும் ஒரு நபருக்கும் நீண்ட வாக்குவாதம் (மோதல்)நடந்தது. என்னை அந்த நிலைக்கு தள்ளினார்கள் என்கிறது. அதற்கு மேல் சிந்தியுங்கள் என்றபோது
அது அத்துடன் முடிந்துவிட்டது என்கிறது. நீங்கள் எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என்றபோது நான் நல்லவன் என்கிறது.
பிறகு நாங்கள் கடவுளைபார்க்க காத்திருக் கிறோம் என்கிறார், திடீரென்று குறுக் கிடும் மற்றொரு குரல் இத்துடன் முடிந்தது என்கிறது.
இப்படி அந்த உரையாடல் தெளிவில்லாமல் தொடர்கிறது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆவி ஆராய்ச்சியில் இருகிறேன் அதற்காக சாதனத்தை உருவாக்கியுள்ளேன், நான் பேசியதிலேயே அன்பு நிறைந்ததாக சுஷாந்த் ஆவி இருந்தது. சுஷாந்த் ஆவியுடன் மற்றொரு ஆவியும் இருக்கிறது என்றார்.