சென்னை :

ரப்பன அஹ்ரகார சிறையில் கைதி எண் 6833 ஆக அடைக்கப்பட்டிருக்கும் சஞ்சனா கல்ராணி பற்றி புதிதாக எந்த வீடியோவும் வெளியாகவில்லை என்றாலும் இது நாடு முழுவதும் இன்று நடந்த விவசாயிகளின் போராட்டத்தைப் பற்றியது.

இப்படி ஒரு செய்தியை ஸ்கூப்-ஊப் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது, விவசாயிகளின் போராட்டத்தை பற்றி பெரிதாக கவலைப்படாத ஆன்லைன் வாசிகளின் கவனத்தை ஈர்க்க இப்படி ஒரு உத்தியை இந்த இணையதளம் கையாண்டிருக்கிறது.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதித்து அவர்களின் சந்ததிகளை அதே நிலத்தில் விவசாய கூலிகளாக மாற்றும் வேளாண் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடிவருகின்றனர்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று நடந்த போராட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி இருந்தன, அதன் தொகுப்பை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளதுடன் அந்த செய்திக்கு இப்படி ஒரு தலைப்பை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.