தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் :

மாம்பழமோ? மாபெரும் பழமோ?
பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு,,,,
தேர்தல்= தேத்துதல் (பணம்)
வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட
திமிங்கல வேட்டைக்கே.
காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு! என பதிவிட்டுள்ளார்.

மேலும்

ஓட்டைப் போடாதீர்கள்
ஓட்டைப் போடாதீர்கள்
வல்லரசாகப் போகும்
இந்தியாவின் கூகுள்
வரைபடத்தில்
ஓட்டைப் போடாதீர்கள்
தேர்தல் வந்துடுச்சி
துட்டுக்கு ஓட்டைப்போட்டு
நம் பிள்ளைகளின்
ஆரோக்கிய வாழ்வில்
(Scan report-டில்)
ஓட்டைப் போடாதீர்கள்

என கேட்டுக்கொண்டுள்ளார்.