ய்யப்பனும் கோஷியும் மலையாள பட இயக்குனர் சச்சி நேற்று முந்தினம் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவர் அளித்த கடைசி பேட்டியில் ஐய்யப்பனும் கோஷியும் படத்தில் பிரித்விராஜ், பிஜூமேனன் கதாபாத்திரங்களுக்கு கார்த்தி, பார்த்திபன் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று தனது ஆசையை வெளியிட்டி ருந்தார்.


பிஜூமேனன் கதாபாத்திரத்துக்கு தன்னை இயக்குனர் சச்சி தேர்வு செய்த சச்சிக்கு நன்றி சொல்லி கடிதம் எழுதவிருந்தார். அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதையறிந்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:
அய்யப்பனும் கௌஷியும் பிஜு மேனன் பாத்திரம் நான் நடித்தால் நன்றாக இருக்கு மென பலரும் சொன்னார்கள். இயக்குனரே சொல்லியிருக்கிறார்-மகிழும் முன்னரே அவருக்கு RIP சொல்லும் நிலை-நிலை குலைத்தது. இன்று படத்தை பார்க்கிறேன். அவர் விருப்பம் ஈடேற முயன்று பார்க்கி றேன். மலையாள நண்பர்கள் ஒத்துழைக்கலாம்.
இவ்வாறு பார்த்திபன் கூறி உள்ளார்.