டிகர் பார்த்திபன் பாடகர் எஸ்பிபிக் கான கூட்டு பிரார்த்தனை பற்றி விடுத் துள்ள அறிக்கை வருமாறு:
தமிழர் மரபில் குழந்தைகளுக்குக் காதுக் குத்துதல் ஒரு சடங்கு.அப்படி எஸ்பிபியின் குரலால் காதுக் குத்தப் பட்டவர்கள் தான் நாம் அனைவரும். நாற்பது வருடங்களுக்கும் மேலாக நம் இதய கிழிசல்களை தன் குரல் இழைக ளால் நூற்பதும், வயது கடந்தும் காதல் வசம் நம்மை ஈர்ப்பதும் எஸ்பிபியின் யின் இளமை ததும்பும் பாடல்களே!


காற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தை விட,எஸ்பிபியின் குரல் பத சதவிகிதம் கூடுதலே. பூமி சுழற்சியின் ஒவ்வொரு நிமிட காரணக்காரியங்கள் நமக்கு தெரியாது ஆனால்,
20/08/20 Thursday 6 PM In India –
8:30 AM in USA-
4:30PM in Dubai
அந்த ஒரு நிமிடம் மட்டும் உலகமே ஒரு புள்ளி நோக்கி இசையுலகின் பெரும் புள்ளி நோக்கி… அவர் மீண்டு வந்து நாம் மீண்டு வர இயலா மகிழ்ச்சியில் ஆழ்த்த,நம் இதயங்குவித்து பிரார்த் தனை செய்வோம்…. அது எஸ்பிபி ஸ்பெஷல் பிரெயர் (Special Prayers Balu- SPB)
இவ்வாறு நடிகர் பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.