இயக்குனர் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் திரைப்படம் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி .

பருத்தி வீரன் திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அவருக்கு அப்பத்தாவாக நடித்த பஞ்சவர்ணம் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அறிந்த நடிகர் கார்த்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும் வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண்முன்னே நிற்கிறது அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.