ரித்வார்

பாபா ராம்தேவ் ஆரம்பித்துள்ள காவலர்கள் நிறுவனத்தில் உள்ளவர்கள் நாட்டுக்காக போரிட்டு உயிரைத் துரக்கவும் தயாராக உள்ளனர் என அந்நிறுவனத்தின் அதிகாரி திஜார்வாலா கூறியுள்ளார்.

பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் காவலர் நிறுவனம் ஒன்று (செக்யூரிட்டி கார்ட்ஸ் ஏஜன்சி) ஆரம்பித்துள்ளார்.   அதாவது நிறுவனங்களுக்கு வாட்ச்மேன் சப்ளை செய்யும் ஏஜன்சி.

பதஞ்சலி நிறுவனத்தை சேர்ந்த திஜார்வாலா இது பற்றிக் கூறுகையில், “எங்களது பாதுகாப்பு வீரர்கள் சாஸ்திரமும் தெரிந்தவர்கள், அஸ்திரமும் அறிந்தவர்கள்.  அனைத்து ஆயுதங்களையும் திறம்பட கையாளத் தெரிந்தவர்கள்.  அவர்களால் நம் நாட்டையே போரிட்டு காக்க முடியும்.  நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்யத் தயாரானவர்கள்” எனக் கூறினார்.

மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் நாட்டில் 50 லட்சத்துக்கு மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் கூறினார்.