‘நேர்கொண்ட பார்வை’ என்ற பெயரில் தமிழில் ரீமேக்கான ‘பிங்க்’தற்போது பவன் கல்யாண் நாயகனாக நடிக்கத் தெலுங்கு ரீமேக் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பவன் கல்யாண் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை க்ரிஷ் இயக்கவுள்ளார்.

விரைவில் இந்தப் படத்தின் பூஜையைப் பிரம்மாண்டமாக நடத்தி அறிவிக்கவுள்ளார்கள்.

ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்குச் சம்பளமாக அல்லாமல், படத்தின் லாப விகதத்தில் பங்குத் தொகையாக வாங்க பவன் கல்யாண் சம்மதம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.