சென்னை:

கொரோனா குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட டிவிட்டில் தவறான தகவல் உள்ளதாக கூறி, டிவிட்டர் நிர்வாகம் அவரது டிவிட்டை அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்தது.

இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான பவன் கல்யாண் வெளியிட்ட கொரோனா தொடர்பான டிவிட்டையும் டிவிட்டர் நிர்வாகம் நீக்கி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள், விதிமுறைகளுக்கு முரணாக இருந்ததால் டிவிட்டர் இந்தியா இந்த நடவடிக்கை எடுத்தது. அதுபோல தெலுங்கு பவன் கல்யாண் வெளியிட்ட ஒரு டிவிட்டையும், டிவிட்டர் இந்தியா நீக்கியுள்ளது.

பிரபலமானவர்கள் இதுபோன்ற சென்சிட்டிவான கருத்தை தெரிவிக்கும் போது சரியான புரிதலோடு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

ரஜினியின் டிவிட் நீக்கப்பட்டதற்கு, அவரது ரசிகர்கள் கடுமையாக சாடியுள்ளனர், பலர் திமுகமீது குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.

ஆனால், ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் மக்களின் பாதுகாப்பை விரும்பினால், அவர் ஒரு திருத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டு மக்கள் மனதில் இடம்பிடிக்கலாம்…