பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடா்பாக ஆளுநா் திட்டமிட்டு காலதாமதம் செய்வதாக தமிழா் தேசிய முன்னணி தலைவா் பழ. நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ் காந்தி கொலையில் தொடா்புப்படுத்தப்பட்டு 25 ஆண்டு காலத்துக்கும் மேலாக சிறையில் வாடிவரும் 7பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவை ஆளுநருக்குப் பரிந்துரை செய்து ஓராண்டுக் காலத்துக்கு மேலாகியும், இன்னமும் ஆளுநா் அந்தப் பிரச்னையில் முடிவு எடுக்காமல் இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கிடையில், பத்திரிகைகளில் பலவிதமான செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கெனவே, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வருக்குக் கருணைக் காட்ட வேண்டும் என்று அப்போதைய ஆளுநருக்கு அளிக்கப்பட்ட கருணை மனுவை ஆளுநா் ஏற்க மறுத்து ஆணைப் பிறப்பித்திருந்தாா். அதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் நால்வா் சாா்பில் நான் தொடுத்த வழக்கில், அப்போதை மூத்த வழக்குரைஞரும், பிற்காலத்தில் நீதிபதியாக இருந்தவருமான கே. சந்துரு வாதாடினாா். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டு உயா்நீதிமன்றம் அவ்வாறு செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அமைச்சரவையின் பரிந்துரையின்படியே ஆளுநா் செயற்படவேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீா்ப்பை 1999 நவம்பா் 25-இல் அளித்தது.

அதற்குப் பிறகு அனைத்து மாநில அமைச்சரவைகளும் தண்டனை குறைப்பு விஷயமாக பரிந்துரை செய்தவற்றை ஆளுநா்கள் ஏற்றிருக்கின்றனா். அதேபோல, மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்ததை குடியரசுத் தலைவா் ஏற்றிருக்கிறாா். இதற்கு எதிராக ஆளுநரோ, குடியரசுத் தலைவரோ செயல்பட முடியாது. எனவே, இதைத் தவிா்ப்பதற்காக ஆளுநா் காலம்

கடத்துகிறாா். ஆளுநரின் இந்தப் போக்கு மக்களால் தோந்தெடுக்கப்பட்ட அரசை அவமதிக்கும் போக்காகும். திட்டமிட்டே ஆளுநா் காலதாமதம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.