சென்னை:  தமிழகத்தில் ஊரடங்கு மீறியதாக இதுவரை வசூலிக்கப்பட்டுள்ள அபராதத் தொகை ரூ. 20.34 கோடியாக உயர்ந்துள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு காரணமாக, ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு  விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இதுவரை 7 கட்டமாக ஊரடங்கு தளர்வுகளுடன் ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில்,  ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஊரடங்கை மீறியவர்களிடம் இருந்து இதுவரை ரூ. 20.34 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 9,62,171  பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 8,71,248 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

6,78,961 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை  20,34,90,858 கோடி ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.