“இறைச்சிக்காக மாடு வெட்டுவதை தடை செய்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக நாடு முழுதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன.

இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், தனது முகநூலில் இது குறித்து பதிவிட்டுள்ளதாவது:

“உத்தரவிட்ட மத்திய மாட்டுக்கறி போராட்டத்திற்கு ஒன்று கூடுபவர்கள் உழவர்களின் போராட்டத்திற்கு ஒன்று கூடவில்லை. கூடியிருந்தால் அரசும் பணிந்திருக்கும்,மாடுகளை அரும்பாடுபட்டு வளர்க்கும் உழவனும் காப்பாற்றப்பட்டிருப்பான்.

உழவன் கதறுவதை அரசாங்கம் போலவே கண்டும் காணாமலும் இருந்த நமக்கு மாட்டுக்கறித் தடைச்சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டால் மட்டும் மாட்டுக்கறி கிடைத்து விடாது.

இனியாவது எதிவரும் காலங்களில் உழவன் போராட்டத்தில் நாம் அனைவரும் இணைந்து கொண்டால் நாம் கேட்கிற மாட்டுக்கறியும் கிடைக்கும்!உயிர் வாழ உணவும் கிடைக்கும்!!”