துபாய்

யுஏஈ வாழ் மக்கள் வாட்ஸ்அப் மூலம் காணொலி, மற்றும் குரல் அழைப்புகளை செய்யும் வசதி வந்துள்ளது.

இதுவரை இங்கு வாட்ஸ்அப் மூலம் செய்தி பரிமாற்றம் மட்டுமே முடியும்.  காணொலி மற்றும் குரல் அழைப்பு செய்யும் வசதி தரப்படவில்லை.  ஆனால் தற்போது இந்த வசதி கிடைத்துள்ளது.

இது பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு ஏதும் வராததால் பலரும் இதைப்பற்றி முன்பே அறியவில்லை.   தற்போது இணைய நேரடி இணைப்பு, வை-ஃபை மற்றும் எந்த இணப்பிலும் இந்த வசதி கிடைக்கின்றது.

இந்த நாட்டின் இரு பெரும் மொபைல் கம்பெனிகளான எடிசலாட் மற்றும் டியூ ஆகிய இரு இணைப்புகளிலும் இந்த வசதி வந்துள்ளது.   டேட்டா சர்வீசின் வேகத்தைப் பொறுத்து தெளிவான படங்கள் கிடைக்கிறது.

இது அங்குள்ள வெளிநாட்டு வாசிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.