விழுப்புரம்:
பொதுமக்களின் பாதுகாப்பே முக்கிய பணி என்று கூறுகிறார்.  விழுப்புரம் புதிய காவல் கண்காணிப் பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன்.

விழுப்புரத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன்  இன்று பதவியேற்றார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
விழுப்புரம் மாவட்டத்தில் காவல்துறையும் பொதுமக்களும் நல்லுறவேடு செயல்பட முதல் நடவடிக்கை எடுக்கப்படும், பொதுமக்கள் குறைகளை தீர்ப்பதில் முழு கவனம் செலுத்தப்படும், பொதுமக்கள் எந்த நேரத்திலும் தங்கள் குறைகளை கூறுவதற்கு என்னை தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.
காவல்துறை எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுமக்களுக்கு நன்மைக்காகவும் அவர் களின் பாதுகாப்பிற்காகவும் எடுக்கின்ற நடவடிக்கையாகவே இருக்கும். காவல் துறை பொது மக்கள் விரும்பும் துறையாக காவலர்கள் பொதுமக்களின் நண்பர்களாக எப்பொழுதும் இருப்பதற்கான வழிமுறைகள் அமைக்கப்படும்.
விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்கள் ஏற்கனவே எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததுபோலவே இப்பொழுதும் ஒத்துழைப்பை விரும்புகிறேன். காவல் பணி என்பது யாருக்கும் பாரபட்சம் காட்டா மல் நீதியை நிலைநாட்டுவதிலும் சட்ட ஒழுங்கை காப்பாற்றுவதில் மட்டுமே இருக்கும்.
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், எந்த ஒரு குற்றச் செயலும் இங்கு அனுமதிக்க முடியாது,  சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் சட்டத்தில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் பாதுகாக்கப்படு வார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் பொது மக்களின் பாதுகாப்பே முக்கிய பணியாக காவல் துறை  செயல்படும் என்று கூறியவர்,  ரவுடிசம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.