சென்னை: திமுகவில் குடும்ப அரசியல் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசத்தை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுகவில் வாரிசு அரசியல் நடைபெற்று வருவதாக பல ஆண்டுகளாக விமர்சனங்கள் உள்ளன. தற்போது  ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு  இளைஞர்அணி தலைவர் பதவி வழங்கப்பட்டு, அரசியல் களத்திலும் இறக்கிவிடப்பட்டுள்ளார். தற்போது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகம் முழுவதும அரசியல் பிரசாரம் மேற்கொண்டு வரும் உதயநிதி, வரும் சட்டமன்ற  தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது மாற்று கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

இந்த நிலையில், டிடி நெக்ஸ்ட் ஆங்கிலப் பத்திரிகைக்கு திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், உதயநிதியின் அரசியல் பயணத்தை தீர்மானிக்கப்போவது  நான் அல்ல; மக்கள் தீர்மானிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

தனது மகனின் அரசியல் பயணம் அவரது செயல்திறன் மற்றும் தமிழக மக்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்று  தெரிவித்து உள்ளார்.

உதயநிதிக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்படுமா என்பது குறித்து பதில் தெரிவித்த ஸ்டாலின்,  திமுகவில் கருத்தியல் நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புடன் நேர்மையாக செயல்படும் நபர்களை  மதிக்கிறது. இன்று நான் இருக்கும் இடத்திற்குச் வருவதற்காக திமுகவின் அடிப்படையில் இருந்து சுமார் 50 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன்.  உதயநிதியும் மற்றவர்களைப் போலவே அடிப்படையில்  கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அவரது செயல்திறன் மற்றும் தமிழக மக்கள் அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதன் அடிப்படையில் அவரது முன்னோக்கி செல்லும் பயணம் முடிவு செய்யப்படும்.

வாரிசு  அரசியல் குறித்து  என்னிடம் கேள்வி கேட்க எவருக்கும் தகுதியில்லை என்று கூறிய ஸ்டாலின்,  மக்களவையில் உள்ள ஒரே அதிமுக உறுப்பினர் யார்? அது பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத். பன்னீர்செல்வத்தின் மற்றொரு மகன், தேர்தலில் போட்டியிட விருப்பமனு சமர்ப்பித்துள்ளர். உள்துறை அமைச்சர்  அமித் ஷாவின் மகன் பற்றி என்ன? அவர் பி.சி.சி.ஐ.ல் நியமிக்கப்பட்டு உள்ளார். இதுபோல ஏராளமான எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் மனுக்கள் பெரும் திட்டம் தொடர்பான கேள்விக்கு,  இந்த நிகழ்வுகளின்போது,  , தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு தனிநபரும் பிரச்சினைகளை எதிர்கொள்வது கண்கூடாக கண்டதாகவும்,  இது  அதிமுக அரசு தோல்வியுற்றதை எடுத்துக்காட்டியுள்ளது. பல இடங்களில், மக்கள் எங்களிடம்  உதவி கேட்டனர். பழனிசாமியை விட அவர்கள்  திமுகமீது  அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றார்.

அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் . தங்களை சட்டத்திற்கு மேலே கருதிக்க்கொண்டு,  தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய டெண்டர்களை வழங்குவதன் மூலம் அவர்கள் அரசாங்கத்தின் பொக்கிஷங்களை கொள்ளையடிக்கிறார்கள் என்றார்.

மேலும், ஆளும் அதிமுக கட்சி மீதும், பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். அதிமுக அரசு மற்றும் அமைச்சர்களின் மீது ஊழல்குற்றச்சாட்டு பட்டியல் 2முறை ஆளுநரிடம் வழங்கியபோதும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றவர், அதிமுக அரசானது,  சிறியது முதல் பெரிய திட்டங்கள் வரை அனைத்தும் பொது பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில், ஊழல்வாதிகளைத் தண்டிப்பதன் மூலமும், அதிமுக மற்றும் அவர்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு கடுமையான தோல்வியைத் தருவதன் மூலமும் இதை ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு கொண்டு செல்வதை மக்கள் உறுதி செய்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.