இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கும்போதே, தமிழகத்தில் படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தப்பட்டன. எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும், இறுதிக்கட்டப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகமே முடங்கியது.
சில தினங்களுக்கு முன்பு ஃபெப்சி அமைப்பு தமிழக அரசுக்கு இறுதிக்கட்டப் பணிகளைத் தொடங்குவதற்கு மட்டும் அனுமதியளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இதனைப் பரிசிலீத்த தமிழக அரசுஅனுமதியளித்தது.
அதன்படி ‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகள் 2 இடங்களில் நடைபெற்று வருகின்றன. விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படத்தின் எடிட்டிங் பணிகள் தொடங்கியுள்ளன. ‘ராங்கி’ படத்தின் எடிட்டிங் மற்றும் டிஐ பணிகள், ‘கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள், தர்மராஜ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் எடிட்டிங், ‘வெள்ளை யானை’ படத்தின் சவுண்ட் மிக்ஸிங் ஆகிய பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.
இந்நிலையில் இன்று முதல் ‘டாக்டர்’ படத்தின் எடிட்டிங், ‘சின்னதா ஒரு படம்’ படத்தின் டப்பிங், ‘மாஸ்டர்’ படத்தின் எடிட்டிங், ‘பென்குயின்’ படத்தின் டப்பிங், ‘பேய் மாமா’ படத்தின் டப்பிங், ‘பாதாம் கீர்’ படத்தின் டப்பிங், ‘ஐபிசி 376’ படத்தின் டப்பிங், மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் படத்தின் டப்பிங், ‘ரோபர்’ படத்தின் டப்பிங், ‘மாங்கல்ய தோஷம்’ தொடரின் இறுதிக்கட்டப் பணிகள், ‘சூர்ப்பனகை’ படத்தின் எடிட்டிங், ‘சுழல்’ வெப் சீரிஸ் எடிட்டிங், ‘ஐ எண்ட் எம் ஸ்டுடியோஸ்’ படத்தின் டப்பிங், ‘2nd show’ படத்தின் டப்பிங், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் வெப் சீரிஸின் இறுதிக்கட்டப் பணிகள், ‘பூமி’ படத்தின் டப்பிங், ‘கற்க கசடற’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் டப்பிங் ஆகிய படத்தின் பணிகள் தொடங்க இருக்கின்றன.
பணியின் தன்மை, பணிபுரியும் தொழிலாளர்கள் விவரம், பணியாளர்கள் பணிபுரியும் இடம் ஆகிய விவரங்களை அரசுக்கு அனுப்ப வேண்டியிருப்பதால் அனைத்து சம்மேளன உறுப்பினர்களும் தங்களின் விவரம், தொழில்நுட்பக் கலைஞர்களின் பணியின் விவரம், பணியின் தன்மை ஆகியவற்றை தங்களது சங்கங்கள் மூலம் சம்மேளனத்திற்கு அனுப்பிய பிறகே பணிக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என ஃபெப்சி அமைப்பு தெரிவித்துள்ளது.