சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைந்து இருந்து வந்த பேரறிவாளனின் தந்தை குயில்தான் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேரறிவாளனின்  தந்தை குயில்தாசன்  உடல்நலமில்லாமல் அவதிப்பட்டதை தொடர்ந்து, பேரறிவாளனுக்கு தமிழகஅரசு 1 மாதம் பரோல் வழங்கியது.  தற்போது, அவருக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் வழங்கி உள்ளது.

இந்நிலையில், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்த பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அதையடுத்து  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயது முதிர்வு காரணமாக அவருக்கு சீறுநீரகம், ஆஸ்துமா, நரம்பியல் போன்ற பிரச்னைகளால் அவர பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், ஒருவாரம் மருத்துவமனையில் தங்கியிருந்து  சிகிச்சை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக அவரது தாயார்  தாயார் அற்புதம்மாள்  கூறி உள்ளார்.