நெல்லை,

தாமிரபரணியிலிருந்து வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களான கோக், பெப்சி ஆலைகள் தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்கக்கோரி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்கள்  இன்று போராட்டம் நடத்தினர்.

அப்போது, தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று போராட்டத்தில் கலந்துகொண்ட  மார்க்சிஸ்ட் பொலிட்  பீரோ உறுப்பினர் பிருந்தாகரத் கூறினார்.

திருநெல்வேலி, சிந்துபூந்துறை, தாமிரபரணி ஆற்றங்கரை ஆகிய பகுதிகளில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.

இதை கண்டித்தும், தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க நிரந்தர தடை விதிக்கக்கோரியும், மார்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்றது.

இந்த போதராட்டத்தில் மார்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் உ.வாசுகி, கனகராஜ் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பேசிய பிருந்தா கரத், , “மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்துகின்றன. எந்த திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் அனுமதியை மத்திய, மாநில அரசுகள் கேட்பதில்லை. இயற்கை வளத்தை மக்களின் அனுமதி இல்லாமல் எடுக்கக் கூடாது. இதற்கு தேவையான சட்டத்தை இயற்ற வேண்டும். தாமிரபரணி தண்ணீரை பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதை நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்”

இவ்வாறு அவர் கூறினார்.