சென்னை:
சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன்  தமிழகஅரசு அறிவிப்பு  அனுமதி வழங்கி உள்ளது.
கொரோனா ஊரடங்கால் திரையுலம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் முடங்கி உள்ளன. இதையடுத்து கடந்த வாரம் சின்னத்திரை சங்கம் சார்பாக பெஃபசி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் சின்னத்திரை தயார்ப்பாளர்கள்  மற்றும் பெரிய திரை தயாரிப்பாளர்கள் தமிழக அமைச்சரை சந்தித்து, படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கோரி மனு கொடுத்தனர்.
இந்த நிலையில், தற்போது  தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது.

சின்னத்திரை  படப்பிடிப்பின் போது தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், முக கவசம் அணிய வேண்டும், பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் தமிழக அரசு  அனுமதி வழங்கி உள்ளது.