சென்னை: நாடு முழுவதும் வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதை யொட்டி, கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ளது.

இந்த நிலையில், தமிழகஅரசின் தடையை எதிர்த்து, உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், இந்து அமைப்புகள் சார்பில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது, விதிகள் தோறும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால், நடப்பாண்டில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, வீதிகளில் சிலை வைத்து வழிபடவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ளது.

ஆனால், அரசின் தடையை மீறி  தமிழகத்தில் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் அமைக்கப் படும் என இந்து முன்னணி அறிவித்து உள்ளது.

இந்த நிலையில்,  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்த முறையீட்டை,   வழக்காக தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தி உள்ளது.