சென்னை:

நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை இன்று 13வது நாளாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னையில் இன்றைய பெட்ரோல் லிட்டர் ரூ.81.82 வும், டீசல் லிட்டர் ரூ.74.77 க்கும் விற்பனை ஆகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட காரணமாக கடந்த 2 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் ஒரே விலையிலேயே இருங்து வந்தது.  உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்த அளவிலேயே உள்ளது. ஆனால், கடந்த மாதத்தில் இருந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஜூன் முதல் வாகனங்கள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. பெட்ரோல் விலை அதிகரித்தக்கொண்டே இருக்கின்றன. இன்று 13-வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்ந்து 81.82 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் டீசல் விலையும் லிட்டருக்கு 54 பைசா உயர்ந்து 74.77 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 13 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.6.28 மற்றும் ,டீசல் ரூ.6.55 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.