கோவை:

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பெரியார் சிலை உடைக்கப்படும் என சர்ச்சை பதிவை தொடர்ந்து தமிழகத்தில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு  கோயமுத்தூரில் உள்ள  பா.ஜ.க அலுவலகம்மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீசியதாக  தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பாலன், ஜீவானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.

இதற்கிடையில் கவுதம் என்ற மற்றொருவருவர்  சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற, கோவை பா.ஜ.க அலுவலகம் முன்பு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில்  பரபரப்பு நிலவி வருகிறது.