பெட்ரோல்,டீசல் விலையை மீண்டும் உயர்த்தியது மத்திய அரசு.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 பைசாவும், டீசல் விலை 1 ரூபாய் 3 காசுகளும் உயர்த்தப்பட்டடுள்ளன.

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்- டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதம் இருமுறை மாற்றியமைத்து வருகின்றன.

அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 42 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு  1 ரூபாய் 3  காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல்,டீசல் விலை உயர்வு நேற்று  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.