நியூயார்க்:
பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு மலிவு விலையில் கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

 

உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன் பொருளாதரத்தில் பின்தங்கிய நாடுகள் பட்டியலில் உள்ள 92 நாடுகளுக்கு குறைந்த விலையில் 4 கோடி தடுப்பூசிகள் சப்ளை செய்ய உள்ளதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தடுப்பு மருந்துகளை பெற்று கொள்வதற்கான ஒப்பந்தத்தில் பெரும்பாலான வல்லரசு நாடுகள் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன. இருப்பினும் பின்தங்கிய நாடுகள் பட்டியலில் உள்ள 92 நாடுகளுக்கு குறைந்த விலையில் 4 கோடி தடுப்பூசிகள் சப்ளை செய்ய உள்ளோம். இந்த மருந்துகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் சப்ளை செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.