மணிலா:

251 பேருடன் சென்ற பிலிப்பைன்ஸ் சுற்றுலாப் படகு கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் பலியாயினர். வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதி நகரான ‘ரீல்’ பகுதியில் இருந்து போலிலோ தீவுக்கு சுற்றுலாப் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணமாக படகு எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் ஈடுபட்டு வருகின்றன. மோசமான வானிலை காரணமாக பணி பாதித்துள்ளது.