பிளாரிடல், பிலிப்பைன்ஸ்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பிளாரிடல் நகரில் இருந்து கிளம்பிய விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்ததில் 10 பேர் மரணம் அடைந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலா அருகே உள்ளது புலாகன் மாநிலம்.   இங்குள்ள பிளாரிடல் நகர் விமான நிலையத்தில் இருந்து லோயோக் நகரை நோக்கி ஒரு விமானம் சென்றுள்ளது.  நேற்று காலை புறப்பட்ட அந்த 6 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானத்தில் 5 பேர் பயணம் செய்தனர்.  இவர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள்.

விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் கட்டுப்பாட்டை இழந்தது.   அதனால் ஒரு வீட்டின் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது.  அந்த வீடு இடிந்து தரைமட்டமானது.    அந்த சமயத்தில் அந்த வீட்டில் 5 பேர் இருந்துள்ளனர்.   வீட்டில் இருந்த அந்த ஐவரும், விமானத்தில் பறந்த ஐவருமாக மொத்தம் 10 பேரும் மரணம் அடைந்துள்ளனர்.