சென்னை: தமிழ்நாடு முழுவதும் நேற்று நடைபெடற்ற 16வது மெகா தடுப்பூசி முகாமில் 17.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  தெரிவித்து உள்ளார். மேலும், கொரோனா தொற்றுக்கு பலியானவர்களுக்காக, தலா ரூ.50ஆயிரம் நிவாரணம் வழங்கும் வகையில், ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இருப்பதாகவும் கூறினார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள் உள்ள நிலையில், ஒமிக்ரான தொற்று பரவலும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தி வருகிறத. அதன்படி நேற்று (26ந்தேதி) மாநிலம் முழுவதும் 16வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றது. சென்னையில் 1600 இடங்களிலும் தடுப்பூசி முகாம் செலுத்தப்பட்டது.

தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  16-வது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 17,31,277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் 5,17,126 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 12,14,151 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் 85.76, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்களின் சதவீதம் 57.94, முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 92 லட்சம் என்று கூறினார்.

மேலும், ஜனவரி 3-ம் தேதி போரூர் பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்க இருக்கிறார். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும  இளம்வயதினருக்கான தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும்.

கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினர் தரப்பில் இருந்து இதுவரை 42,671 விண்ணப்பங்கள் வந்துள்ளன என கூறியவர், தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 20,934 பேருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்,  கொரோனாவால் இறந்த 375 முன்கள பணியாளர்களுக்கு தலா 25 லட்சம் வீதம் 93 கோடியே 15 லட்சம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.