திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றுகிறார்’ என்று முதல்-மந்திரி மீது எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டினார்.

கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும்  மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான  ரமேஷ் சென்னிதலா கோட்டயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  கேரள முதல்வரை கடுமையாக சாடினார்.

ஓணம்  பண்டிகையின்போது அடுத்த 100 நாட்களில் அரசு செய்து முடிக்க வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து முதல்பர் பிரனராயி விஜயன் அறிவிப்பு வெளியிட்டார்.  அது நிறைவேற்றப்படவில்லை.  ஆனால்,  தற்போது 2-வது முறையாக மீண்டும்  அடுத்த 100 நாட்களில் செய்து முடிக்க வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து அறிவித்து உள்ளார்.

இது முற்றிலும் மக்களை ஏமாற்றும் முயற்சி என்றவர், ஏற்கனவே அறிவித்த  செயல்திட்டங்களே இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், முதல்வர் செயல் திட்டங்கள்  அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக  கூறுகிறார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல். அவர் அறிவித்த எந்தவொரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றவர்,  முதல்வர் கூறியபடி எந்த திட்டம்  செயல்படுத்தப்பட்டு உள்ளது?, அதனால் என்ன பலன் கிடைத்து உள்ளது?, அதில் பயன் அடைந்தவர்கள் யார்? என்ற விவரத்தை வெளியிட தயாரா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த முறை 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்போவதாக அறிவித்தார். ஆனால் ஒருவருக்கு கூட இதுவரை வேலை கிடைக்கவில்லை. தற்போது மீண்டும்  மேலும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, 5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, ஒரு நாளைக்கு ஒரு எந்திரத்தில் இயங்கும் கயிறு தொழிற்சாலை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறார் பினராயி விஜயன்.

இவ்வாறு அவர் கூறினார்.