ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் சிபிஎம் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்ள கேரளாமுதல்வர் பினராயி விஜயன் அங்கு சென்றுள்ளார்.

ஐதராபாத் நகர போலீஸ் கமிஷனர் அலுவலகம், புஞ்சகுட்டா காவல் நிலையம் ஆகியவற்றை பினராயி விஜயன் திடீரென பார்வையிட்டார்.

தெலுங்கானா உள்துறை மந்திரி நரசிம்ம ரெட்டி, டி.ஜி.பி ஆகியோரும் உடன் சென்றனர். அம்மாநில போலீசார் பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பங்களை பினராய் விஜயஜ் பார்வையிட்டார். கேரளாவில் இருந்து தொழில்நுட்ப பயிற்சி பெற போலீசாரை தெலங்கானாவுக்கு அனுப்பி வைப்பதாக பினராய் விஜயன் தெரிவித்தார்.