திருவனந்தபுரம்

மீபத்தில் கேரளாவுக்கு பிரதமர் வந்தபோது அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது என கேரள முதல்வர் பிரணாயி விஜயன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மெட்ரோ ரெயில் தொடக்க விழாவில் கலந்துக் கொள்ள வந்த பிரதமருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்ததாகவும் ஆனால் அதை அரசு வெளியே தெரிவிக்கவில்லை எனவும் பிரணாயி விஜயன் கூறினார்.

மாநில காவல் உயர் அதிகாரி சென்குமாரும் இதை ஆமோதித்தார்.   உளவுத்துறையின் தகவலின் படி ஒரு பெரிய தீவிரவாத தாக்குதல் கொச்சியில் பிரதமருக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டதால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை எனவும் கூறினார்.

பிரணாயி விஜயன், சென்குமார் இருவருமே இது பற்றிய விவரங்களை சொல்ல மறுத்து விட்டனர்.