கொரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளிப்போயிருக்கின்றன. இந்தச் சூழலில் பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியிடப்பட்டு வருகின்றன.
500க்கும் அதிகமான திரையரங்குகளைத் தற்காலிகமாக மூடப்போவதாக அறிவித்துவிட்டது.
இந்த நிலையில் ஏற்கெனவே தங்களின் 200 மில்லியன் டாலர்கள் பட்ஜெட் கொண்ட ‘முலன்’ திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்ட டிஸ்னி நிறுவனம், அடுத்ததாகத் தாங்கள் தயாரித்திருக்கும் ‘ஸோல்’ திரைப்படத்தையும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தன்று நேரடியாக வெளியிடுகிறது. டிஸ்னி ப்ளஸ் இல்லாத நாடுகளில் திரையரங்கில் வெளியாகும் என்றாலும் அதற்கான தேதி முடிவாகவில்லை.