“தமிழை பேசினால் மட்டும் தமிழ் வளராது, தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். சுந்தர் பிச்சை, அப்துல்கலாம் ஆகியோரால் தமிழுக்குதான் பெருமை.

ஆங்கிலத்தையும் மாணவர்கள் பேசி பழக வேண்டும். ஆங்கிலத்தில் தவறாக பேசினால் கிண்டல் செய்வார்கள். எனவே நண்பர்களுடன் ஆங்கிலத்தில் பேசி பழகுங்கள்” என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியது(ம்) சர்ச்சையாகி இருக்கிறது.

 

“ரஜினி சொல்வது தவறு. பெரும்பாலான நாடுகளில் அந்தந்த மக்களின் தாய்மொழிதான் பேசப்படுகிறது. முன்னேறிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சீனா உட்பட பல நாடுகளின் நிலை அதுதான். தாய் மொழிக் கல்வியே ஒருவரை அறிவார்ந்தவராக ஆக்கும்” என்று பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் உலவும் ஒரு பதிவு:

 

ப.சண்முகசுந்தரம் எழுதி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடான,  “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்”  என்ற நூலில் இருந்து..

“W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார்

அவர் கூறியுள்ள சில .எடுத்துகாட்டுகள் :

Cry – ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay – களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare – ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture – கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.

==========================

தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake

S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..

உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .

கொல் = kill ( தமிழில் “கொ ” வரும் இடத்தில் ” K ” ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )

” பொத்தல் ” ல இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .

ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .

2015 ஆய்வுகளின் படி :

( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )

– சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
– இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .

கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !

” ழ ” உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .

இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .

தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .

மரத்தை கட்டுவதால் கட்டு மரம்
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் ” கட்டு மரம் ” தான்”

# ஆகவே தமிழ் மொழி இரண்டாம்தரமானது அல்ல. தவிர அவரவர் தாய்மொழியில் கற்பதே சிறப்பு..