டெல்லி:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று காலை வானொலியில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி மாதம்தோறும், மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலி வாயிலாக மக்களிடம் உரையாற்றி வருகிறார்.அதுபோல இன்று காலையும் உரையாற்றினார்.  அப்போது அவர் பேசியதாவது,

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஏழை மக்களை பாதித்துள்ளதை தானும் உணர்கிறேன். கொரோனா வைரசை கட்டுப்படுத்தவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த சூழலில் வேறு வழியில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியுள்ளது. வீட்டில் முடங்கிக் கிடக்கும் சிரமம் எனக்கு புரிகிறது ஊரடங்கு உத்தரவுக்காக  நான் மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

கொரோனா என்ற வைரஸ் எதிர்த்து போராடும், மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு வீரவணக்கம்

கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற, கட்டுப்பாட்டை பின்பற்றுங்கள்.

மக்கள் தொகை அதிகம் கொண்ட நம் நாட்டில், கொரோனா தடுப்பு பெரும் சவாலாக இருக்கும்

மக்கள் தனித்திருக்காவிட்டால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டிய நிலையை, கொரோனா உருவாக்கி விடும்

நாம் அனைவரும் ஒன்றிணைந்து கோவிட்-19 வைரஸை வீழ்த்துவோம்.

உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கவே லாக் டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இந்த போர் மிகவும் சிரமமானது. இதனால்தான் கடினமான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தியர்களின் நலனை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

காலத்தின் சூழலுக்கு ஏற்ப இதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது முக்கியம்.

ஏராளமாமானேர்  கொரோனா வைரஸிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டிற்கு வெளியே. அதாவது நமது நலனைக் காக்க செவிலியர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோர் போராடி வருகின்றனர்.

லாக் டவுன் உத்தரவை வேண்டுமென்றே யாரும் உடைக்கவில்லை. என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சிலர் செய்கின்றனர்.

‘சமூக தூரம் என்பது உணர்ச்சி தூரத்தை குறிக்காது. இது உணர்வுப் பூர்வமாக விலகி இருப்பது அல்ல. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது.

எந்த அறிகுறிகளும் இல்லாவிட்டாலும் பலர் தனிமைப்படுத்தலுக்குள் சென்றுள்ளனர். அவர்களின் பொறுப்புணர்வுக்காக நான் அவர்களைப் பாராட்டுகிறேன்.

பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடந்த டேபிள் & வீனா போன்ற இசைக்கருவிகளை பலர் வெளியே எடுத்தார்கள் என்பதையும், அவற்றில் பயிற்சி செய்யத் தொடங்கியதையும் நான் சமூக ஊடகங்களில் பார்த்தேன்.

நீங்களும் அதை செய்ய முடியும். அது உங்களுக்கு இசையின் மகிழ்ச்சியை மட்டுமல்ல.

“இன்று, ஒவ்வொரு இந்தியனும் உயிரைக் காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள் தங்கியிருக்கிறார்.

நான் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால், லாக் டவுன் உத்தரவை முறையாக பின்பற்றாவிட்டால் கொரோனா வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வது மிகவும் சிரமம்.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் சிறை பிடித்துள்ளது.

ஆற்றல், அதிகாரம், ஏழை, பணக்காரன், அறிவியல், அறிவு என எல்லாவற்றுக்கும் சவால் விடுத்து வருகிறது.

நாட்டின் எல்லைகளைக் கடந்து காலநிலை வேறுபாடின்றி வைரஸ் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

வரவிருக்கும் காலத்தில், இந்த இந்தியர்கள் தனது நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து தடைகளையும் உடைப்பார்.

அடுத்த மாதம் மீண்டும் மன் கி பாத் நிகழ்ச்சியில் சந்திப்போம்,

அதற்குள் கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வென்றிருப்போம்”

இவ்வாறு அவர் பேசினார்.