சென்னை:  மாநில தலைநகர்  சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகள் குறித்த விவரங்கள் அறிய சென்னை மாநகராட்சி கொரோனா உதவி மையம் தொலைபேசி எண்களை அறிவித்து உள்ளது.

இந்த தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, நோயாளிகளின் உறவினர்கள், நோயாளிகளின் உடல்நிலை குறித்த விவரங்களை தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.