சென்னை

பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடங்கள் 5-ஆக குறைக்கப் பட்டுள்ளன. இதனால் பொதுத் தேர்வு மதிப்பெண் 600-ல் இருந்து 500-ஆக குறைகிறது. ஆனால், விருப்ப முள்ள மாணவர்கள் பழைய நடை முறையின்படி மொத்தமுள்ள 6 பாடங்களையும் சேர்த்து தேர்வு எழுதலாம் என்றும்,  அவர்களுக்கு 600 மதிப் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப் படும் என்று கல்வித்துறை அறிவித்து உள்ளது.

இது மக்களிடையே மட்டுமின்றி ஆசிரியர்களிடையேயையும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இரு மதிப்பெண் முறை வைக்கப்பட்டால் மாணவர்கள் குழப்பம் அடைவார்கள் என்று குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கல்வித்துறையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது தேர்வு முறையிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அடுத்த கல்வியாண்டு முதல்,  அந்தவகையில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வு முறை களில் பள்ளிக்கல்வித் துறை சில மாற்றங்களை செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில்,

மாணவர்கள் உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஏற்றதாக வும், மனஅழுத்தத்தை குறைக் கும் வகையிலும் மேல்நிலை வகுப்புகளுக்கு தற்போது உள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன், புதிதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகளை நடைமுறைப் படுத்த தமிழ்நாடு மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியக்குழு ஒப்பு தல் வழங்கியுள்ளது. இந்த புதிய முறையை அமல்படுத்த தேர்வுத் துறை இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது.

இதையேற்று மேல்நிலை வகுப்புகளுக்கு தற்போது உள்ள 4 முதன்மை பாடத்தொகுப்புகளு டன், புதிதாக 3 முதன்மை பாடத் தொகுப்புகள் அறிமுகம் செய்யப்படுகிறது.

அதன்படி மாண வர்கள் மொழிப்பாடம், ஆங்கிலம் தவிர மீதமுள்ள 4 முதன்மை பாடங்களில் ஏதேனும் 3 பாடங் களை மட்டும் தேர்வு செய்து எழுதிக் கொள்ளலாம்.

விருப்பமுள்ளவர்கள் 4 முதன்மை பாடங்களையும் சேர்த்து எழுதலாம். எனினும், மாணவர்கள் தாங்கள் தேர்வு செய்து எழுதும் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த புதிய மேம் படுத்தப்பட்ட பாடத்தொகுப்பு அடுத்த கல்வியாண்டு (2020-21) முதல் பிளஸ் 1 வகுப்பில் அமலாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத் தில் தற்போது ஒவ்வொரு பிரிவி லும் தமிழ், ஆங்கிலம் உட்பட 6 பாடங்கள் உள்ளன. ஒரு பாடத் துக்கு தலா 100 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 600 மதிப்பெண் களுக்கு மாணவர்கள் தேர்வு எழுது கின்றனர்.

புதிய நடைமுறையின் படி இனி மாணவர்கள் தங்கள் விருப்பத்தின்படி 5 பாடங்களை மட்டும் தேர்வு எழுதிக் கொள்ள லாம். அதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களை கட்டாயம் தேர்வு செய்ய வேண்டும்.

இதர முதன்மை பாடங்களில் பிடித்தமான 3 பாடங்களை தேர்வு செய்ய வேண்டும். அவர்களுக்கு 500 மதிப்பெண்க ளுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

அதேநேரம் விருப்ப முள்ள மாணவர்கள் பழைய நடை முறையின்படி மொத்தமுள்ள 6 பாடங்களையும் சேர்த்து தேர்வு எழுதலாம். அவர்களுக்கு 600 மதிப் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப் படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பு மாணவர்களிடையே குழப்பதை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை விவரம்: