சென்னை:
பிளஸ்2 மாணவர்கள் மறுகூட்டலுக்கு 24-ம் தேதி முதல்  விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  திடீரென வெளியாகின. பிளஸ்2 தேர்வின் கடைசி தேர்வை கொரோனா ஊரடங்கால் பலர் எழுத முடியாத நிலையில்,  அவர்களுக்கு வரும் 27ந்தேதி தனித்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், கடந்த 16ந்தேதி காலை  இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில்,  மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி வரும் 24ம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
மேலும், மறுகூட்டம் சம்பந்தமாக  பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், ஆன்லைன் வசதியுடன் தனி அறை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் தமிழகஅரசு உத்தர/விட்டு உள்ளது.
மேலும், உ  ஒரு மணி நேரத்துக்கு 20 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், தனிமைப்படுத்தப் பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள், நிலைமை சீரான பின் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிதக்கப்பட்டுள்ளது.