திருச்சி,

தார் எண் இணைத்து பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

மேலும் தமிழக பிளஸ்2  மாணவர்களுக்கான புதிய வரைவு பாடம்  அடுத்த மாதம் 15ந்தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார்.

இன்று திருச்சி வந்த தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது,

தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் பாடத்திட்டங்கள் மாற்ற முயற்சி நடை பெற்று வருகிறது.  தற்போது நீட் போன்ற தேசிய தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பிளஸ் பாடத்திட்டம் மாற்றப்பட இருக்கிறது.

பாடத்திட்டத்திற்கான முன்வரை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந்தேதி வெளியிடப்படும். இந்த வரைவு பாடத்திட்டம் குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் ஒப்படைத்து கருத்துக்கள் பெறப்படும். அதன் அடிப்படையில்  அடுத்தாண்டு முதல் பிளஸ்2  பாடத்திட்டம் மாறும்.

இந்த புதிய பாடத்திட்டமானது சிபிஎஸ்இ. பாடத் திட்டத்துக்கு இணையாகவும்,  அனைத்து விதமான  தேசிய  போட்டித் தேர்வுகளை எதிர்க் கொள்ளும் வகையிலும் உருவாக்கப்படும் என்றார்.

மேலும் அடுத்த மாத இறுதிக்குள் அனைத்து  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும், அந்த கார்டில் மாணவர்களின் ஆதார் எண் மற்றும் ரத்த வகை குறித்து பதிவு செய்யப்படும்.

பள்ளிக்குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படாமல் இருக்க பள்ளியின் சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்து கொள்ள பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.