சென்னை:

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகிற 16-ந் தேதி வெளியாகும் என்றும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருவதாக அரசு தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி   பிளஸ்2 பொதுத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் 6 ந்தேதியுடன் முடிவடைந்தது.மொத்தம் 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு  எழுதியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த  ஏப். 11ந்தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி நடைபெற்ற வந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திட்டமிட்டப்படி வரும் 16ந்தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.