டெல்லி: வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பிரதமர்  மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண் அமைச்சா் துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந் நிலையில் பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் கூறி இருப்பதாவது: தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு வருத்தமளிக்கிறது. சமூக சேவைக்காகவும், விவசாயிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவும் அவர் குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

இந் நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.